Sunday, July 20, 2014

புளிய மரங்கள் அழிக்கப்படுவதால் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம்


சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது முதலில் அழிக்கப்படுவது அந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள புளிய மரங்கள் தான்.  நான்கு வழிச் சாலைகளை அமைக்க வெட்டிய புளிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை எங்குமே உடனடியாக வைக்கப்படுவதில்லை.  அப்படி வெட்டப்பட்ட மரங்களில் பெரும்பான்மையானவை புளிய மரங்களே. 


புளிய மரங்களின் எண்ணிக்கை குறைவதால், இனி வரும் காலத்தில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம். புளிய மரங்கள் ஒன்றும் இன்று வைத்து விட்டு நாளை பலன் அனுபவிக்கும் மர வகைகள் அல்ல. பலன் கிடைப்பதற்கு நீண்ட வருடங்கள் பிடிக்கும். வருங்காலத்தில் புளி இல்லாமல் சமையல் செய்யும் நிலை கூட வரலாம். புளிசாதம், புளிக் குழம்பு, வற்றல் குழம்பு, மீன் குழம்பு, புளித் துவையல், புளி ஊறுகாய் இதெல்லாம் இனிமேல் கனவாகப் போகிறது. ஆமாம்... பீசா, பர்கர், சமோசா, பரோட்டா, நூடுல்ஸ், இதற்கெல்லாம் புளி எதற்கு ???

இடம்: செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை, ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட படம்

0 comments:

Post a Comment