ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்

அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் தற்போது புதியதாக பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அமேசான் ஃபயர் என்ற மொபைல் ஃபோன் ஒன்றை...

Sunday, July 20, 2014

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை

பழங்காலத்தில் வானத்தை துழாவிப் பார்க்கும் தொலைநோக்கிகள் இல்லை.  அந்த கிரகத்துக்கு நேரில் அவர்கள் சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. ஆனாலும் பூமியில் இருந்து 5 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள ஒரு கிரகத்தை எப்படியோ எட்டிப் பார்த்து, அதன் தரைப் பகுதி முழுவதும் செந்நிறத்தால் ஆனது என்பதைக் கண்டுபிடித்து, அந்த கிரகத்துக்கு "செவ்வாய்" என்று அழகிய தமிழில் பெயர் சூட்டிய நமது பழங்கால வானசாஸ்திர அறிஞர்களின் திறனை வியந்து பாராட்டாமல்...

புளிய மரங்கள் அழிக்கப்படுவதால் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம்

சாலைகளை விரிவாக்கம் செய்யும்போது முதலில் அழிக்கப்படுவது அந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள புளிய மரங்கள் தான்.  நான்கு வழிச் சாலைகளை அமைக்க வெட்டிய புளிய மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை எங்குமே உடனடியாக வைக்கப்படுவதில்லை.  அப்படி வெட்டப்பட்ட மரங்களில் பெரும்பான்மையானவை புளிய மரங்களே.  புளிய மரங்களின் எண்ணிக்கை குறைவதால், இனி வரும் காலத்தில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரலாம். புளிய மரங்கள் ஒன்றும் இன்று வைத்து விட்டு...

இரவு நேரங்களில் நடக்கும் சாலை விபத்துகள்

இரவு நேரங்களில்  நடக்கும் சாலை விபத்துகள் பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலேயே நடக்கின்றன. மது அருந்த போகும்போது நடந்தா போக முடியும்? மது அருந்திவிட்டு வீட்டுக்கு போகணும்னா பைக் வேணுமே? நடக்கும் விபத்துகளுக்கு உண்மையான காரணம் drunk & drive தான். உட்கார்ந்து சாவகாசமாக குடிக்க இடம் கிடைப்பதால் தான் நிறைய பேருக்கு குடிக்கவே தோன்றுகிறது. மதுக் கடைகளில் bar  இல்லையென்றால் இப்படிப்பட்ட விபத்துகளைக்...

Saturday, July 19, 2014

ஈ-மெயில் முகவரி இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்டீர்களா?

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை  துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.  தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.  நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். "ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே" என்றான் துடைக்க வந்தவன். "கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈ மெயில் முகவரி இல்லையா? ச்சே!"  என்று...

Wednesday, July 16, 2014

ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்

அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான்(Amazon) தற்போது புதியதாக  பல சிறப்பு  அம்சங்களுடன் கூடிய  மொபைல் ஃபோன் ஒன்றை வெளியிட்டுள்ளது.  "அமேசான் ஃபயர்" (Amazon Fire) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஒரு 3D மொபைல் ஆகும். இந்த மொபைலில் பிரபலமான ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான்  இதன் முக்கியமான சிறப்பம்சம். இது அமேசான் தயாரித்த "ஃபயர் ஆப்ரேட்டிங் சிஸ்டம்" (Fire OS) மூலம்...

Tuesday, July 15, 2014

அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா?

ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார்.  அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும் பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார்.  உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார். உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி...

Monday, July 14, 2014

தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில் அலை கடல் போன்ற ஓர் ஏரி

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது. புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர்...

Sunday, July 13, 2014

அரிசிலாற்றுக்குத் தென் கரையிலிருந்து பழையாறை நகரம்

அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது! நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புதுநீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின்...

கோடை வெய்யிலுக்கு ஏற்ற எலுமிச்சை புதினா ஜூஸ்

கோடை வெய்யிலுக்கு ஏற்ற எலுமிச்சையும்,  புதினாவும் சேர்ந்த ஜூஸ்! தேவையான பொருட்கள்: எலுமிச்சை பழம் -1 புதினா -1/4 கப் சர்க்கரை - 4 தேக்கரண்டி  இஞ்சி சாறு -1 தேக்கரண்டி  தண்ணீர் ஐஸ் கட்டி   செய்முறை:   எலுமிச்சை பழத்தைச் சாறு எடுத்துக் கொள்ளவும். புதினாவை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதை வடித்து விட்டு அதனுடன்...

Saturday, July 12, 2014

நாங்க கோதுமை கொடுக்கறோம் நீங்க கடற்கரை மணல் கொடுங்க

சீனாவுடன் 1960 களில் நடந்த  போரில் இந்தியா தோல்வியை தழுவியது.  போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது.  அப்போது அமெரிக்கா  "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பியது.  என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா?  லால் பஹதூர் சாஸ்திரிக்கு...

Friday, July 11, 2014

நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது

 சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடிய சக்தி மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்.வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க...
நாட்டுல இருக்கற புகை பிடிக்கற 20 கோடி மக்களைப் பார்த்து,  "புகைக்காதீங்க... புகை நமக்கு பகை" ன்னு சொல்ற அரசாங்கம், இங்க பத்துக்கும் குறைவா இருக்கற சிகரெட் கம்பெனிகளை மூடச் சொல்லலாமே? இவங்களுக்கு அந்த கம்பெனிகளோட வரியும் வேணும், அதே நேரத்துல நமக்கு "புகைக்காதீங்க" ன்னு அட்வைஸ் வேறே பண்ணுவாங்களாம்.  இப்படி விளம்பரப்படுத்த கோடிக்கணக்குல செலவு வேறே செய்வாங்களாம்.   அரசாங்கம் செய்யவேண்டியது ஒரே ஒரு காரியம் தான். ...

கொடுமையான நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.  இந்த மஞ்சள் வாழைப்பழம் பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும், நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் - தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு,...

சதுரகிரி எங்கே இருக்கிறது?

ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து சுமார் 8  கி.மீ. தொலைவில் வரும் சிற்றூர் கிருஷ்ணன்கோவில். இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15  கி.மீ. தொலைவு பயணித்தால், வத்திராயிருப்பு (வத்ராப்) வரும். அங்கிருந்து இன்னும் 7  கி.மீ பயணித்தால் தாணிப்பாறை என்ற மலைவாழ் மக்களினின் கிராமத்தை அடையலாம். இதுதான் சதுரகிரியின் அடிவாரம். இங்கிருந்து சுமார் 10  கி.மீ தொலைவு மலைப்பாதையில்...

Thursday, July 10, 2014

ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்காவுக்குப் போறீங்க?

இந்த இங்கிலீஷை தாய் மொழியா படிச்சவங்களுக்கு இருக்கற ஒரு நினைப்பு என்னன்னா, உலகத்துல எங்க போனாலும் நாங்க பிழைச்சுக்குவோம் அப்படிங்கறது தான்.  அதனால அவங்களுக்கு மற்ற மொழி பேசறவங்களைக் கண்டால் கொஞ்சம் இளக்காரம் தான். அதை வெளிக்காட்டுற மாதிரி "இங்கிலீஷ்.. விங்கிலீஷ்"  என்ற திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்,  "ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்காவுக்குப் போறீங்க?" என்று அமெரிக்க அதிகாரி கேட்டதும், நீங்க தமிழ் தெரியாம...

Wednesday, July 09, 2014

நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

டிவிட்டர்ல ரொம்ப நாளைக்கு முன்னால அது எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாம்னு போனேன். அங்க போயி பார்த்தால், ஏதோ ஒரு வெப்சைட்ல   இருந்து இலவசமா SMS அனுப்பறமாதிரி ஒரு ஃபீலிங். 140 எழுத்துக்கள் என்ற  கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற  கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள். எனக்கு SMS அனுப்பறதே பிடிக்காது. இதுல அங்கே போயும் அதையே தான் செய்யணுமா? அதை விட பேஸ்புக்...

இதுக்கும் ஒரு சப்-டைட்டில் போடணும்

படம் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து அடிக்கடி வந்துகிட்டே இருக்கற இந்த சப்-டைட்டில் இம்சை தாங்க முடியல.  பரவாயில்லையே... நம்ம அரசாங்கத்துக்கு நம்ம மக்கள் மேலே இவ்வளவு கரிசனமா? இதுவும் நல்ல விஷயம் தானேன்னு அதை மறந்துட்டு படம் பார்க்கலாம்ன்னா... ஒரு விஷயம் மட்டும் கண்ணை உறுத்துச்சு.  அது என்னன்னா...    புகை பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் புகை பிடித்தல் உயிரைக் கொல்லும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு இப்படி...

சென்னையில் ஷேர் ஆட்டோவில் சுகமான பயணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு இன்று விடியற்காலையில் சென்று இப்பொழுது தான் திரும்பி வந்தோம். போகும்போது சென்னை-எழும்பூர் வரை சுகமான ரயில் பயணம். எழும்பூரிலிருந்து அண்ணா நகர் வரை மாநகர பேருந்தில் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் முதன்முதலாக சிறிது தூரம் பயணம் செய்தோம். அண்ணா நகர் ரவுண்டானாவிலிருந்து அண்ணா ஆர்ச் வரை ஒரு நபருக்கு 7 ரூபாய் மட்டுமே கட்டணம். அண்ணா ஆர்ச் வழியாக போகும்போது நிமிர்ந்து பார்த்தால் ஆர்ச்சில் ஒரு பகுதியை மட்டும்...

மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுங்க சார்

ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் டூ வீலர் ஓட்ட வேண்டும் என்று நம்மிடம் கண்டிப்பு காட்டும் காவல்துறை, ஆட்டோ ஓட்டுனர்களிடம் மீட்டர் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று சொல்ல தயங்குவது ஏன்? ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு சங்கம் இருப்பதைப்போல டூ வீலர் ஒட்டுபவர்களுக்கும் ஒரு சங்கம் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? பெட்ரோல் விற்கும் விலையில் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்குவது சாத்தியமில்லை என சொல்லும் ஆட்டோ ஓட்டுனர்களே, ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்....

Tuesday, July 08, 2014

ஆட்டுத்தோல் அளவுக்கு எடம் கொடுத்தா போதும்

 "ஆட்டுத்தோல் அளவுக்கு எடம் கொடுத்தா போதும்"னு ஆற்காடு நவாபுகிட்ட வெள்ளக்காரன் கேட்டான். கடல் தாண்டி யாவாரம் பண்ண வந்தவங்களுக்கு இது கூடவா செய்யக்கூடாதுனு நெனச்சு. "சரி, எந்த எடம் வேணும்?"னு நவாபு கேட்டாரு. வெவரமான வெள்ளக்காரன், கையோட கொண்டுவந்த ஆட்டுத்தோல அவருக்கு முன்ன விரிச்சுக் காட்டினான். அதுல ஊரு, ஆறு, குளங்குட்ட, கடலு, மல, ரஸ்தா எல்லாமே கோடு கோடா வரஞ்சிருந்தாங்க. அதுல... ஆத்து ஓரமா இருக்கற ஒரு எடத்தக்காட்டி,...

முட்டை உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

முட்டை என்பது  ஒரு உயிர் தழைத்து கருவாகி, குஞ்சாகி பிறக்க தேவையான மூலசத்துக்கள் அனைத்தையும் கொண்ட இயற்கை அன்னையின் லஞ்ச் பேக்.  அதன் நன்மைகள் அளவிட முடியாதது.   ஆய்வு ஒன்றில் தினம் 2 முட்டை, 6 வாரம் தொடர்ந்து உண்பது நல்ல எச்.டி.எல் கொலஸ்டிராலை 10%  வரை உயர்த்தும் என கண்டறியப்பட்டது. முட்டை எல்.டி.எல் கொலஸ்டிராலையும் உயர்த்தும்.  ஆனால் இப்படி நிகழ்வது உண்மையிலேயே பாதுகாப்பானது. உங்கள் உணவு "லோ கார்ப்" ...

ரிலயன்ஸ் டேட்டா கார்டு

இந்த ரிலயன்ஸ் டேட்டா கார்டு மாதிரி ஒரு படு மோசமான  டேட்டா கார்டு உலகத்துலேயே வேறே எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன். இந்த Netconnect+ டேட்டா கார்டின் அதிக பட்ச வேகம் 3.1 MBPS. ஆனால், எத்தனை முறை முயற்சி செய்தாலும் 110 KBPS வேகத்துக்கு மேலே போகவே இல்லை. இப்படி ஒரு படு மோசமான இணைய சேவை கொடுக்கறதுக்கு பதிலா பேசாம இழுத்து மூடிட்டு போகலாம். ஏதோ இந்த டேட்டா கார்டு தான் இப்படி இருக்குதுன்னு பார்த்தால், இவங்களோட GSM மொபைல் சேவை அதுக்கும்...

Monday, July 07, 2014

மிளகைத் தேடி இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்தார்கள்

சூப் தயாரிப்பதற்கு மிளகு எங்கே கிடைக்கும் என்று தேடி நம் நாட்டிற்குள் வந்தவர்கள் தான் இந்தியாவையே 350 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியினர். அவர்கள் மிளகு வணிகத்திற்காக  மலபார் பகுதிகளில்  போர் நடத்திய போது அவர்களை தீவிரமாக எதிர்த்த மலபார்-கோட்டயத்தின் சிற்றரசரான  கேரளவர்மா பழசி ராஜா,  தனது  நாட்டில் பயிரிடப்பட்டிருந்த மிளகு கொடிகளை வெட்டி எரித்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கைப்பிடி மிளகு...

புரதசத்துள்ள காளான் உணவு

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள...

பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம்

இந்தியாவில் இருந்து ஐரோப்பிய, அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காய்கறிகள், பழங்களில் பூச்சி மருந்தின் தாக்கம் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் இருப்பதால் அவை தடை செய்யப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். சமீபத்தில் இந்தியாவில்இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பச்சை மிளகாயில் அளவுக்கு அதிகமாக பூச்சி மருந்து கலந்து உள்ளது உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும், இது தொடர்ந்தால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது...

சதுரகிரி மலைக்கு ஒரு பயணம்

வருடத்துக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சதுரகிரி மலைக்கு சென்று வருவது வழக்கம். பரபரப்பு நிறைந்த நகர வாழ்கையிலிருந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கும் பயணம் இது. சதுரகிரி மலையில் மின்சாரம் இல்லை, செல்போன் இல்லை, பீசா, பர்கர் இல்லை, கோக், பெப்சி இல்லை... அவ்வளவு ஏன்... பால் கலந்த தேநீர் கூட கிடைக்காத இடம் சதுரகிரி மலை.  அங்கே எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத மலைக்காட்டில் கிடைக்கும் இயற்கையோடு இணைந்த அந்த அனுபவத்தைசொன்னால்...